Showing posts with label Kadhal. Show all posts
Showing posts with label Kadhal. Show all posts

Saturday, July 14, 2012

மனம் மரணமடைந்தது !!!















உன் வாசம் படிந்த கைக்குட்டை...
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ கைபேசியில் அனுப்பிய முத்தங்கள்.. என 
உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும் 
நினைவுச் சின்னங்களாய் மட்டுமே போய் விடுமோ என
சத்தியமாய் நான் நினைக்கவில்லை...

என் வசந்த காலத்தின்
ஒரு பக்கம் முற்றிலும்
இலையுதிர் காலமாய் மாறிப்போனது..!

நீ எதை சொன்னாலும் 
அப்படியே நம்பிவிடும் மூடன் நான், 
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில்.. 
திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய 
இரக்கமில்லாத...
கொடூரமான... 
அந்த 
"பிரிந்து விடுவோம்" 
என்ற வார்த்தையை..??

"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்கிறேன் இன்று ...!


விடையறியாமல்..!!



















வெகுதூரத்தில்
சிறு புள்ளியாய் உன் உருவம்…
இருந்தும்,
நீ விலகிச் சென்றதை
நம்ப மறுத்து
அசையாமல் அவ்விடமே
காத்து நிற்கும் எனது கால்கள்!!!

ஓயாமல் ஒதுங்கியும்
உன்னுடன் கழித்த
மணித்துளியை
புரட்டத் தவறாத என் மனம்…
இருந்தும்,
அருகில் இருப்பவர் கண்டும்
ஈரம் காய மறுக்கும்
எனது கண்கள்!!!

உனது பெயரை
உச்சரித்தே ஓடும்
எனது எண்ணங்கள்…
இருந்தும்,
எத்தனையோ கேள்விகளுக்கு
விடையறியாமல்
ஒட்டிக்கொண்ட உதடுகள்…
விடைகளுடன்
விக்கியபடி
எனது தொண்டைக்குழி !!!

விடியும் பொழுதெல்லாம் சிறு நடுக்கம்...



விடியும் பொழுதெல்லாம் 
சிறு நடுக்கம்...

நிதமும் 
என்னுடன் நான்
எனையறியாமல்
செய்யும் யுத்தம்!!

நான்
தட்டி எழுப்பியும் 
தலையணை தேடி 
தவறவிட்ட
கனவினைத் தேடும் 
மனம்...

விட்டுச்சென்ற
பின்னும்
விடிந்தவுடன் 
என் வீட்டு ஜன்னலுக்கு
ஏங்கும் விழிகள்...

என் மறுப்பை மீறி
உனை
எண்ணிச் சிரிக்கும் 
உதடுகள்...

உன் புகைப்படம் காண 
என் சம்மதம் கேட்டு
சண்டையிடும்
இதயம்...

இழக்காமல் 
இழுத்துப் பிடித்தும் 
தெரியாமல்
தொலைந்து போன
நான்!

கொள்ளையிட்டு 
காணாமல் போன 
நீ!!! 

இதயத்தை
தொலைத்து விட்டேன்.................
தேடியும் புண்ணியமில்லை
நீயே என்னை தொலைத்த பின்
அது இருந்தால் என்ன
இறந்தால் என்ன?????????

நான் இன்னும் தனியாக தான் நடந்து செல்கிறேன்..!!
























மஞ்சள் நிற தெரு விளக்கில்,
கரு நிற தார் சாலையில்...
தனியே நடந்து செல்கிறேன்..!

நிறமில்லா மழை துளி நனைத்திருக்க..
முகமில்லா காற்று வருடி செல்ல...
என் அகமெல்லாம் 
உன் நினைவுகள் நிறைந்திருக்க...
உன் நினைவுகள் என் கால்களை பின் நோக்கி இழுத்து செல்ல..
பற்றி பிடித்திட உன் கைகளை தேடியே..
தனியே நடந்து செல்கிறேன்..!

உனக்கு பிடிக்கும் என்பதால்..
பலவற்றை எனக்கும் பிடித்தது..!
ஆனால் இன்று ஏன் எனக்கு மிக பிடித்த உனக்கு 
என்னை அறவே  பிடிக்கவில்லை!!!??

என் கால்கள் கலைத்து போனாலும் 
என் மனம் இன்னும் உன்னை தேடி கொண்டே தான் இருக்கிறது..
ஆமாம்,
நான் இன்னும் தனியே தான் நடந்து செல்கிறேன்..!

உன்னோடு நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்..
உன்னோடு நான் பேச என்னும் ஒவ்வொரு வார்த்தையும்..
எனக்குள் ஆயிரம் ஆயிரம் ஒத்திகை காண்கிறது..!
எங்கெங்கோ போகும் சாலையில் 
இறங்கி நடக்கின்றேன்..!
முடிந்துவிட்ட சாலையை வெறித்து பார்த்துவிட்டு..
இங்கேயே இறந்து விடுமோ நம் காதல் என்று..
கண்ணீர் சிந்தியே வழி மறந்து 
நான் இன்னும் தனியே தான் நடந்து செல்கிறேன்..!!

நீ மறந்து விட்ட பல நிகழ்வுகளை 
காகிதத்தில் எழுதி வைக்கவில்லை நான்!!
பாதுகாப்பாய் என் இதயத்தின் 
சதைப்பகுதியில் செதுக்கி வைத்திருக்கிறேன்..!
நேரம் இருந்தால் வந்து எட்டி பார்த்துவிட்டு செல்..!

உனக்கெப்படி தெரியும்..!?
நீ என்னை எப்படி எல்லாம் நேசித்தாய் என்று..!
உன் உதடுகளை கேட்டு பார்..
என் உதட்டை வர்ணித்த கதை சொல்லும்..!

மனமிருந்தால் வந்து சேர்..!
நான் இன்னும் தனியாக தான் நடந்து செல்கிறேன்..!!